Thursday, August 28, 2014

மதுரையில் வலைப்பதிவர் திருவிழா : 26.10.2014 - ஞாயிற்றுக் கிழமை

part 1 photo PARTIMAGE.jpgpart 2 photo PARTIMAGE2.jpgpart 3 photo PARTIMAGE3.jpgpart 4 photo PARTIMAGE4.jpgpart 5 photo PARTIMAGE5.jpgpart6 photo PARTIMAGE56.jpgpart 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpgpart 9 photo PARTIMAGE9.jpgpart 10 photo PARTIMAGE10.jpgpart 11 photo PARTIMAGE11.jpgpart 12 photo PARTIMAGE12.jpgpart 13 photo PARTIMAGE13.jpgpart 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg photo PARTIMAGE16.jpg
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....

மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...

படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.


மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்தப் பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
வலைப்பதிவர் விழா நிர்வாகக் குழு - மதுரை
http://www.tamilvaasi.com/2014/08/261014.html

No comments:


Post a Comment







Sunday, June 29, 2014

"எழுத்தாளர்களின் வழிகாட்டி தஸ்தயேவ்ஸ்கி'



உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாக ரஷிய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி திகழ்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் தஸ்தயேவ்ஸ்கி எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவலான "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.
இந்த நாவலை அதன் மூலமான ரஷிய மொழியில் இருந்து எழுத்தாளர் அரும்பு சுப்பிரமணியன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலை ரஷிய தூதரக அதிகாரி செர்கேய் எல். கோத்தவ் வெளியிட, கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சி. மகேந்திரன் பேசியது:
ரஷிய எழுத்தாளரான தஸ்தயேவ்ஸ்கி உலகப் புகழ் பெற்றவர். அவரது படைப்புகள், உலக எழுத்தாளர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்து பலரது மனங்களை கவர்ந்துள்ளது.

அவர் 130 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய "கரமாஸவ் சகோதரர்கள்' என்ற நாவல் ஏற்கெனவே ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது அதன் மூல மொழியான ரஷிய மொழியிலிருந்து தமிழில் அரும்பு சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தமிழ்ப் படைப்புலகில் மிகப்பெரிய சாதனையாகும்.

இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு தஸ்தயேவ்ஸ்கி எழுதிய இந்த நாவல், உலகில் மிகப் பெரிய அதிர்வை உண்டாக்கியது. மனிதனின் மனசாட்சியை உலுக்கிய இந்த நாவல், தமிழகத்திலும் பலரை கவர்ந்துள்ளது. சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு சமூகம் காரணமா? தனி மனிதன் காரணமா? என்பது குறித்து விரிவாக உரையாடுகிறது இந்த நாவல். இதனைத் தமிழில் மொழிபெயர்த்ததன் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு மிகப்பெரிய கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றார் மகேந்திரன்.

காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன், பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்பிரமணியன், தாரா கணேசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி

Saturday, June 28, 2014

தமிழகத்தில் முதல்முறையாக குரங்குகளுக்கு மறுவாழ்வு மையம்



தமிழகத்திலேயே முதல்முறையாக புதுக்கோட்டை அருகே வார்பட்டு கிராமத்தில் 125 ஏக்கரில் குரங்குகள் மறுவாழ்வு மையம் அமைக் கப்படவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, திருமயம், பொன்னமராவதி பகுதி களில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. காடுகள் எல்லாம் கட்டிடங்களாக உருமாறிவிட்ட நிலையில், கடும் வறட்சியால் பாதிக் கப்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தன.

இதனால், தமிழகத்தில் மயில்களின் சரணாலயமாக திகழ்ந்த விராலிமலை முருகன்கோயில் பகுதி தற்போது குரங்குகளின் புகலிடமாக மாறிவிட்டது. மேலும் சித்தன்னவாசல், திருமயம் கோட்டை, புதுக்கோட்டை பி.யூ. சின்னப்பா பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களிலும் உணவுக்காக குரங்குகள் முகாமிட்டுள்ளன. 

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங் களைக் கிழித்து எறிவதும், வீடுகளுக்குள் புகுந்து சமைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருள் களை சூறையாடுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதனால் நிம்மதி இழந்த மக்கள் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.1.20 லட்சத்தில் 37 கூண்டுகள் நிறுவப் பட்டு அதில் சிக்கும் குரங்குகளை அடர்ந்த காடுகளில் கொண்டு விடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனாலும் குரங்குகளின் தொந்தரவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக மாவட்ட ஆட்சியர் மனோகரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் குரங்குகளுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட வன அலுவலர் என்.தங்கராஜு தலைமையில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. 


இதன்படி, பிரான்மலை அருகே பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வார்பட்டு கிராமத்தில் கல்தரையான 125 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் காடுகள் அமைக்கவும், குரங்குகளுக்கு எளிதில் உணவு கிடைக்கும் வகையில் கொய்யா, நாவல், நெல்லி, புளி, இலந்தை, சப்போட்டா, சீத்தாப்பழம் போன்ற பழம் தரும் மரக் கன்றுகளை நடுவதும் என்றும் அதைச் சுற்றி சோலார் மின் வேலி அமைக்கவும், தண்ணீர் தொட்டிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கு களுக்கு கருத்தடை செய்யத் தேவையான வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சத்தில் திட்ட அறிக்கை தயார் செய்து ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஒப்புதல் ஓராண்டுக்குள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு வார்பட்டில் குரங்குகள் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். அவ்வாறு இந்தமையம் அமைந்தால் இதுதான் தமிழகத்தின் முதல்மையமாக இருக்கும். 

தி இந்து

Wednesday, June 25, 2014

தஞ்சை அருகே குளத்தில் 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு


தஞ்சாவூர் புன்னைநல்லூர் அருகே குளத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ எடை கொண்ட 5 ஐம்பொன் சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டன. 

தஞ்சாவூர்- நாகை சாலையில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலை அடுத்த பவளக்காரன் சாவடி குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் டிராக்டர்களைக் கழுவிச் சுத்தம் செய்தபோது, தண்ணீருக்குள் சுவாமி சிலைகள் இருப்பதைக் கண்டனர். 

அவர்கள், அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற பாபநாசம் வட்டாட்சியர் அருண்மொழி, டிஎஸ்பி சிவாஜி அருட்செல்வன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் குளத்தைப் பார்வையிட்டு, அதில் கிடந்த 5 சிலைகளையும் கைப்பற்றினர். 

600 கிலோ எடை 
 
அவை 3 அடி உயரமுள்ள அய்யனார் சிலை, இரண்டரை அடி உயரமுள்ள பூர்ணா மற்றும் புஷ்கலா அம்மன் சிலைகள், ஒரு அடி உயரமுள்ள காளியம்மன் மற்றும் மாரியம்மன் ஐம்பொன் சிலைகள் என்பதும் பல லட்சம் மதிப்பு கொண்டவை என்பதும் தெரிந்தது. இவற்றின் மொத்த எடை 600 கிலோ.
கைப்பற்றப்பட்ட சிலைகள் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. 

அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இந்த 5 சிலைகளும் கடந்த மாதம் 25-ம் தேதி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள பாலையூர் அம்மன் கோயிலில் இருந்து திருடப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது. 

திருடப்பட்ட சுவாமி சிலைகள் மீண்டும் கிடைத்துள்ளதை அறிந்த பாலையூர் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இச்சிலைகள் திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

தி இந்து

Saturday, June 21, 2014

ஐராவதம் மகாதேவன் - தினமணி ஆசிரியர் கலாரசிகன்





தமிழ் இலக்கியத் திருவிழாவிற்குத் தமிழகத்தின் தலைசிறந்த கல்வெட்டு அறிஞரும், "தினமணி' நாளிதழின் மேனாள் ஆசிரியப் பெருந்தகையுமான ஐயா ஐராவதம் மகாதேவனை நேரில் சென்று அழைக்கவும், அவரது ஆசியைப் பெறவும் சென்றிருந்தேன்.

தனது உடல் நலம் காரணமாக விழாவிற்கு வர இயலாமையைத் தெரிவித்த அவருடன் சுமார் இரண்டு மணி நேரம் இருந்த ஒவ்வொரு நொடித்துளியும், இப்பிறவியில் யான் பெற்ற பெரும் பேறு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்னிடம் தெரிவித்த சில கருத்துகளை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இப்போது நமது கையில் தவழும் "தினமணி' நாளிதழ், ஐயா ஐராவதம் மகாதேவன் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாற்றியமைத்த வடிவமைப்பு. ஒருபக்க ஆசிரியர் உரை, கட்டுரைகள் என்கிற ஒழுங்குமுறை அவர் நடைமுறைப்படுத்தியது. "தலையங்கம்' என்பதை நல்ல தமிழில் "ஆசிரியர் உரை' என்று மாற்றியவரும் அவர்தான். 

 ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. எப்படி ஊர் ஊராகச் சென்று ஓலைச்சுவடிகளைத் திரட்டி, சங்கத்தமிழ் இலக்கியங்களை நமக்குப் பாதுகாத்துத் தந்தாரோ, அதேபோல ஐயா ஐராவதம் மகாதேவனும் காடு மலையெல்லாம் சுற்றி அலைந்து, கோயில் குளங்கள் என்று சுற்றித் திரிந்து, பல அரிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து தமிழுக்குத் தந்திருக்கிறார். இவருடைய கண்டுபிடிப்புகள்தான் தமிழுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்குமான தொடர்பை உறுதிப்படுத்த உதவியிருக்கிறது.

அவர் "தினமணி' ஆசிரியராக இருந்தபோது எழுதிய சில முக்கியமான தலையங்கங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அதை என்னிடம் தந்துவிட்டார். கூடவே அவரது வாழ்த்துகளுடன். ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார்.

தினமும் அதிகாலையில் எழுந்ததும், ஐயா ஐராவதம் மகாதேவன், "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வை வணங்கிவிட்டுத்தான் அன்றைய நாளைத் தொடங்குகிறார். உ.வே.சா. நூலகத்தில், ஒரு மூலையில் கிடந்த தமிழ்த் தாத்தாவின் சிலையை நிறுவ அவர் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும், "தினமணி' வாசகர்களின் உதவியுடன் "சிலப்பதிகாரம்' பதிப்பு வெளிவந்தது பற்றியும் விளக்கும்போது, தமிழ்த் தாத்தாவுக்கு நன்றிக்கடன் செய்த பெருமிதம் அவரது குரலில் தெரிந்தது.

உ.வே.சா.வுக்கு அன்றாட சந்தியாவந்தனம் மற்றும் மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பண மந்திரங்கள் மனனமாகத் தெரியுமே தவிர, சம்ஸ்கிருதம் தெரியாது என்பது ஐராவதம் ஐயா சொல்லித்தான் எனக்குத் தெரியும். உ.வே.சா.வுக்கு ஆங்கிலம்கூடத் தெரியாதாம். தமிழை மட்டுமே நேசித்தும், சுவாசித்தும் வாழ்ந்திருக்கிறார் "தமிழ்த் தாத்தா'.

அகத்தியரின் மறுபிறவி "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. என்று கருதும் பெரியவர் ஐயா ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி, தமிழில் வெளிவந்த சிறந்த சரித்திரம் உ.வே.சா. எழுதிய "மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரிதம்'. மிகச் சிறந்த சுயசரிதம் அவரது "என் சரித்திரம்'.

தமிழர்தம் இல்லங்களை எல்லாம் உ.வே.சா.வின் படம் அலங்கரிக்க வழிவகை செய்தல் வேண்டும் என்று எனக்குள்ளே ஓர் உத்வேகம் தோன்றி இருக்கிறது. ஐயா ஐராவதம் மகாதேவன் விட்ட இடத்திலிருந்து அந்தப் பணியை இட்டுச் செல்லும் பேறு எனக்கு வாய்க்க வேண்டும். அதற்கு இறைவன் அருள வேண்டும்.

உ.வே.சா. நூலகத்தில் பல புத்தகங்களை மறுபதிப்பாக வெளிக்கொணர நிதி இல்லை என்கிறார்கள். உ.வே.சா.வின் கையெழுத்துப் பிரதிகள் சில இன்னும் அச்சாகாமல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தை மீட்டுத்தந்த பெருந்தகையின் நூல்களைப் பதிப்பிக்க உ.வே.சா. நூலகம் இருந்தும், அதற்கு நிதி வசதி இல்லை என்பது இதயத்தைப் பிசைகிறது. நாம் அதற்கு என்ன செய்யப் போகிறோம்?



ஐயா ஐராவதம் மகாதேவன் போலவே, தமிழாகவே வாழும் இன்னொரு அறிஞர் "சேக்கிழார் அடிப்பொடி' டி.என்.இராமச்சந்திரன். இவரும் தமிழ் இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. "பயணத்தைத் தவிர்க்க விரும்புகிறேன்' என்று அவர் கூறியபோது அதற்குமேல் அவரை வற்புறுத்தத் தோன்றவில்லை.

கடந்த ஆண்டு தஞ்சையில் அவரது இல்லத்தில் சந்தித்தபோது, அவர் எனக்குச் சில புத்தகங்கள் தந்தார். அதில் அவர் எழுதிய "வழி வழி பாரதி' என்கிற புத்தகமும் அடக்கம். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று சொல்லத் தகுந்த தமிழ்ப் பேரறிஞர் பெருந்தகை தி.வே.கோபாலையர். அவரது அணிந்துரையுடன் வெளியிடப்பட்டிருக்கும் புத்தகம் இது. அப்புத்தகத்தின் மேன்மை பற்றி இனி கேள்விக்கே இடமில்லைதானே!

பெரியவர் டி.என்.இராமச்சந்திரனுக்கு சேக்கிழாரில் எந்த அளவுக்கு ஆழங்காற்பட்ட புலமையோ, அதேபோல பாரதியையும் வார்த்தைக்கு வார்த்தை ரசித்து மகிழும் பிரேமை. திருலோக சீதாராமும் கரிச்சான் குஞ்சுவும் பேசிக் கொண்டிருந்தார்களாம். பதிவு செய்கிறார் டி.என்.ஆர்.

""திருலோகம்! நான் பாரதியாரைப் பற்றி நிறையப் பேசிவிட்டேன்; எழுதி விட்டேன். மேலும் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று திருலோக சீதாராமைப் பார்த்து அமரர் கரிச்சான் குஞ்சு கேட்டார். அவருக்குத் திருலோகம் கூறிய விடை இது: ""நல்லது. நீ ஒரு காரியம் செய். பாரதியாரைப் படி''.

எத்தனை தடவை படித்தாலும் முழுமையான நிறைவு ஏற்படாத அளவுக்கு அத்தனை ஆழமும், கருத்துச் செறிவும், இனிமையும் கொண்டது பாரதியின் எழுத்து. அந்த பாரதியை வரிவரியாக ஆய்வு செய்ததுபோல இருக்கிறது சேக்கிழார் அடிப்பொடியின் "வழி வழி பாரதி'.

பாரதியின் தமிழ், பாரதியார் பாடல்களில் வேதாந்தக் கருத்துகள், பாரதியை ஷெல்லி, புஷ்கின், ரூமி, மில்டன், ப்ரௌனிங், ஃபிரான்சிஸ் தாம்ஸன் ஆகியோருடன் ஒப்பாய்வு செய்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து ஆய்வு மாணவர்கள் தங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளைக்கூட அமைத்துக்கொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, பாரதியும் மில்டனும் அற்புதமான ஒப்பாய்வு.

பதினான்கு உள்தலைப்புகள் கொண்ட "வழி  வழி பாரதி' புத்தகத்தின் அணிந்துரையில் தி.வே.கோபாலையர் குறிப்பிட்டிருப்பதுபோல, "பாரதியாரின் கவிதைகள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்துள்ள சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் பாரதியாரை உணர்ந்து நமக்கு உணர்த்துதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர்.

தமிழ்மணி, தினமணி

Friday, May 30, 2014

Ms. Jyothi Reddy - CEO of Keys software solutions [Biography]


At the age of just 16, She married because of her family financial position. By the age of eighteen, she became mother of two girls. She worked for Rs. 5 per day. But today she is the CEO of Keys software solutions in USA.

Meet Ms. Jyothi Reddy - CEO of Keys software solutions.

Early Life and Education:-She was born in Narasimhula Gudem in Hanumakonda mandal, Warangal District as eldest of four children to a common peasant who has lost his employment during emergency. His father was joined in Army but could not continue because of his attachment with the family.As it was very difficult for the family to meet the both the ends, he was forced to join Jyothi Reddy BALASADAN, a government orphanage at Hanumakonda as amother less child.From 5th class to 10th class Jyothi Reddy stayed in orphanage by having solitary life away from home.She passed 10th class with good marks bt could not continue her education.At the age of just 16 they performed her marriage with Mr. SangiReddy.and at 18, she became mother of two girls.

Career:- It was very difficult for her to provide even basic needs to her family.So she started working as agriculture labour for Rs. 5 per day.She worked from 1986 to 89 on field.in 1989,Nehru Yuvak Kendra (NYK) started a night school in the village to teach the basic education for adults.She was the only educated girl in village so they appointed her as the volunteer to educate the adults after giving some training. It fetched her Rupees 150 per month.Her hard work and dedication impressed the Inspection authorities  and they  appointed her Mandal Prerak of Hanumakonda.


After being appointed as Mandal Prerak Jyothi had to visit all the centres of the Warangal district and realized the importance of education. She completed her graduation and post graduation Distance Mode from Ambedkar Open University. Even University authorities were impressed by her urge for education. She did B. Ed from Anna University and become a government teacher.

A Dream: When Jyothi was working as inspector of schools, a relative of her who settled in America came to her place. Jyothi accompanied her during her stay and observed how much change had been taken in the life style of her America settled relative.So for a bright future for her daughters, she made up her mind and learnt computers and started saving money for her passport and visa.. After series of early failures she could get a visiting visa and flew to America with a little amount.

she joined as a salesperson in “ Movie Time ’’ a video shop in New Jersey.She stayed as paying guest in gujarathi family. While she was working iin Video Time a known Indian from Warangal saw her and recommended her name to his brother who owned a company called “ CSAMERICA” and she was appointed as recruiter after being trained. Later a well know company ICSA offered her a good job with handsome salary. Again she faced some problems as her visa was not approved and she went for H1 visa. She had to resign her job in ICSA and again had to work for $5 per hour in nominal jobs till she got her H1 visa.


She went to Mexico for her VISA stamping. All the hardships of obtaining visa gave her an idea of establish her first entrepreneurship to assist the people to get their Visas. Thus Keys software solutions was initiated. It extended it services like developing software solutions and recruitment and other job providing areas. Jyothi came to America in May 2OOO and by September, 2001 she became entrepreneur. She made her cousin as partner as his partner and extended her business to become more profitable.

Fulfillment of Dreams :- Her hard work, commitment and dedication fetched her the success she dreamed for. She made enough money to take care of her children and her near relatives. Her two daughters could finish higher education in America from prestigious universities and got married to well settled bridegrooms. Her dream to provide good living conditions to her daughters was fulfilled.

Humanity: She strongly believes the words of Mother Teresa… “ The worst disease in the world is neither poverty nor other, lack of feeling of belongingness, being unwanted is the worst ”. Whenever she visits the Orphanages in India she prefers to spend more time with the orphans. She visits Women’s colleges and empowers them with her life experience. She helped many Indians to settle in America by providing initial shelter and guidance.

Monday, April 21, 2014

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி







உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 

2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. 

அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். 

‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. 

அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். 

அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.

கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். கடவுள் அருளால் பிழைத்தேன்.

ஆளும் கட்சியிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?

நான் இதெல்லாம்பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதோ இருக்கும் காலத்தைக் கொஞ்சமாவது நிம்மதியுடன் வாழ நாங்கள் நினைக்கிறோம்.

மன்னியுங்கள்... அந்தப் படம் இன்னமும் உங்களைத் துரத்துகிறதா?

இங்கே குதுப் வீடு எது, எங்கிருக்கிறது என்று கேட்டால், யாராவது ஒருவர் வழிகாட்டிவிடுவார். ஒரு சாமானிய வாழ்க்கை வாழ்பவனுக்கு இப்படிப்பட்ட அடையாளம் சுமை. (அருகில் உள்ள மேஜைக்கு அடியில் உள்ள ஒரு பெரிய பையை எடுப்பவர் அதிலிருந்து நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் வெளியான ஒரு இந்திப் படத்தின் ஒரு பாத்திரம், சுவரில் மாட்டியிருக்கும் குதுப் படத்தைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் படங்கள் அவை. அவற்றைக் காட்டிச் சொல்கிறார்...) இப்படி எவ்வளவோ இடங்களில் தேவையே இல்லாமல் நான் குறிவைக்கப்படுகிறேன்.

கலவரங்களின்போது முற்றிலுமாகத் தீக்கிரையான பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?

நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.

மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், பின் எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?

இரண்டு நம்பிக்கைகள். ஒன்று, இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். இத்தனை தலை முறைகளாக எங்களைக் காத்த மண் கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.

அற்புதமான விஷயம். இந்த நன்னம்பிக்கை துளிர்விட எது காரணமாக அமைந்தது என்று தெரிந்துகொள்ளலாமா?

கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் என் நம்பிக் கைக்கான அடிப்படை.

மோடியைப் பற்றியும் அவருடைய ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறையச் செய்திருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.

கலவரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் ஒன்றுமே செய்யவில்லையா?

உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடிஜி அப்படியெல்லாம் ஒரு வார்த்தை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும் அவர் குஜராத்தில் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படும் வளர்ச்சியைப் பற்றியும்தானே பேசுகிறார்கள்...

ஒரேயொரு உதாரணம். சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருந்தார், இன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.

அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதை வளர்ச்சியாக - ஒரு அரசாங்கம் உருவாக்க வேண்டிய விஷயமாக - கருதுகிறீர்கள்?

காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பேட்டியில் என் கேள்விகள் முடிந்துவிட்டன. இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?

நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.

-ஆரத் தழுவி விடைகொடுக்கிறார் குதுப்.

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து

Sunday, April 20, 2014

இந்தியர்களின் பார்வை வேறு; காஷ்மீரிகளின் பார்வை வேறு! - சையத் அலி ஷா கிலானி பேட்டி




இந்தியாவின் மணிமகுடம் காஷ்மீர். அதன் தீராத தலைவலியும் அதுதான். காஷ்மீரைக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கட்டுப்படுத்தும் குரல்களில் சையது அலி ஷா கிலானியினுடைய குரல் முக்கியமானது. ஜமாத்-இ-இஸ்லாமி காஷ்மீர், தேரிக்-இ-ஹுரியத், அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு என கிலானி எந்த அமைப்பில் இருந்தாலும் காஷ்மீர் பிரிவினை ஒன்றே அவர் முன்வைக்கும் நிரந்தரத் தீர்வு.

“காஷ்மீரில் பயங்கரவாதமும் ரத்தக்களரியும் அதிகரிக்க கிலானியே காரணம்” என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. வாழ்வின் பிற்பகுதியில் திடீர் திடீரென்று வீட்டுச் சிறை நடவடிக்கைக்கு உள்ளாகும் கிலானி, தேசத்துரோக வழக்கு உள்பட பல வழக்குகளை எதிர்கொள்கிறார். 85 வயது முதுமை, சிறுநீரகப் புற்றுநோய், இதயக் கோளாறு எல்லாவற்றையும் தாண்டி சுதந்திர காஷ்மீர் கனவு அவரைத் துடிப்போடு இயக்குகிறது. கிலானியிடம் பேசினேன்.

நீங்கள் உங்களை எப்படி முதலில் உணர்கிறீர்கள் – ஒரு காஷ்மீரியாகவா அல்லது இந்தியராகவா?

நான் எப்போதுமே என்னை ஒரு காஷ்மீரி என்று அழைத்துக்கொள்வதையே பெருமையாக உணர்கிறேன்.

சரி, காஷ்மீரிகளின் தேவை என்ன? தேசத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் ரீதியாக சில தேவைகள் இருக்கின்றன; காஷ்மீருக்கும் அப்படியே. காஷ்மீரத்தின் முக்கிய அரசியல் தேவை இந்தியா, பாகிஸ்தான், சர்வதேச சமூகம் ஆகியவை உறுதிகூறியபடி தங்களுடைய எதிர்காலம் குறித்த முடிவை எடுக்கும் சுயநிர்ணய உரிமை.

ஆனால், காஷ்மீர் பிரிவினையை எல்லோருமே விரும்பவில்லை. அப்படி விரும்பாத காஷ்மீரி பண்டிட்டுகள் அவர்களுடைய சொந்த ஊர்களிலிருந்து அடித்து விரட்டப்பட்டார்கள். அவர்களும் காஷ்மீர் மண்ணின் மைந்தர்கள்தான் இல்லையா?

காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று நாங்கள் கோரும்போது முஸ்லிம்களை மட்டும் சொல்லவில்லை. பண்டிட்டுகள், சீக்கியர்கள், பௌத்தர்கள் என்று எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறோம். பண்டிட்டுகளும் இந்த மண்ணின் பிள்ளைகள்தான். பண்டிட்டுகள் ஏன் தங்கள் ஊரைவிட்டுச் சென்றார்கள் என்பது பெரிய கேள்விக்குறி, அதைப் பற்றி நிறைய விவாதிக்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீரிகளுக்கு எல்லா வகையிலும் உதவ இந்திய அரசும் காஷ்மீர் சகோதரர்களை அரவணைக்க இந்தியர்களும் தயாராகவே இருக்கிறோம். ஏன் உங்களைப் போன்ற தலைவர்கள் இந்திய அரசை ஆக்கிரமிப்பாளராகவும் சக இந்தியர்களை எதிரிகளாகவும் பார்க்கிறீர்கள்?

இந்தியாவை ஆக்கிரமிப்பாளராகவும் இந்தியர்களை எதிரிகளாகவும் பார்ப்பது எங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல – காஷ்மீர் மக்களே அப்படிப் பார்க்கின்றனர். ராணுவ பலத்தாலும் பல்வேறு வகை அடக்குமுறைகளாலும் இந்திய அரசு எங்கள் வாயை அடைப்பதில் வெற்றி பெற்றிருக்கலாம்; உணர்வுகளை வெற்றி கொள்ள முடியாது. இந்திய அரசும் இந்திய மக்களும் எங்களுக்குச் செய்யக்கூடிய சிறந்த உதவி, காஷ்மீரிகளின் உணர்வை மதித்து – அவர்கள் விரும்பும் வகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண உதவுவதே.

தீர்வு என்று நீங்கள் குறிப்பிடுவது காஷ்மீர் பிரிவினையைத்தானே... பிரிவினை நீங்கலாக உங்களுக்கு வேறு தீர்வே தெரியாதா?

இந்தக் கேள்வியே அபத்தமானது; என்னுடைய நாட்டை ஆக்கிரமிப்பாளன் ஒருவன் ஆக்கிரமித்திருக்கிறான். என்னுடைய நியாயமான உரிமைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆக்கிர மிப்புக்கு எதிரான என் குரல் பொருத்தமற்றதாகப் பார்க்கப் படுவது அபத்தம் இல்லையா?

உங்கள் வரலாற்று நியாயங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம், எந்த ஒரு போராட்டமும் சமகாலப் புவியரசியலைப் புறக்கணிக்க முடியாது. காஷ்மீருக்கும் இது பொருந்தும் இல்லையா?]

வரலாற்று உண்மைகளை ஒருபோதும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் உள்ள நியாயமான கவலைகளைக் கருத்தில்கொண்டு செயல்பட காஷ்மீரிகள் தயாராக இருக்கின்றனர். அதேசமயம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் ராணுவ நோக்கங்களுக்காக காஷ்மீர் மக்களைப் பிணையாக்க முடியாது.
]
சரி, காஷ்மீர் தனிநாடாகவே ஆகிறது என்றே வைத்துக்கொள்வோம்... சுற்றிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற ராணுவ சக்திகளின் நடுவே எத்தனை ஆண்டுகளுக்கு காஷ்மீர் தனித்து இருந்துவிட முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இதைவிடச் சிக்கலான புவிசார் அரசியல் சூழலில் ஏராளமான சிறு நாடுகள் தனித்துவம் மிக்க நாடுகளாகச் செயல்படுகின்றன. நாமிருப்பது 21-ம் நூற்றாண்டு; எந்த நாடும் தனது ராணுவ பலத்தின் மூலம் இன்னொரு நாட்டைக் கைப்பற்றிவிட முடியாது. எனவே, தனி நாடாக எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்ற சிந்தனைக்கே இடம் இல்லை.

இந்தியச் சுதந்திரத்துக்குப் பின் 66 ஆண்டுகள் ஆகியும்கூட இன்னமும் காஷ்மீரிகளால் தேசிய நீரோட்டத்தில் கலக்க முடியவில்லையே...

கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையை இந்தியா கையாண்டுவரும் விதத்தைப் பார்த்தால், காஷ்மீரிகளின் தேவைகளை நிறைவேற்றுவது ஒருபுறம் இருக்கட்டும் – காஷ்மீரிகளின் தேவைகள் என்னவென்று தெரிந்துகொள்ளக்கூட அது அக்கறை காட்டவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தச் சுதந்திரம், தேசிய நீரோட்டம் இவற்றைப் பற்றியெல்லாம் உங்களுடைய பார்வைக்கும் காஷ்மீரிகளின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீங்கள் சுதந்திரம் அடைந்திருக்கலாம். நாங்கள் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. எங்களைப் பொருத்த அளவில் தேசிய நீரோட்டம் என்பது உங்களுடைய தேர்தல் சார்ந்த அரசியல் அல்ல; அது எங்களுடைய சுதந்திரப் போராட்டம்தான்.
]
ஒரு போராட்டத்துக்குப் பல்வேறுகட்ட இலக்குகள் முக்கியம் இல்லையா? காஷ்மீர் பொருளாதாரரீதியாகக் கீழே தள்ளப்பட இப்படிப் பிரிவினை ஒன்றே முதலும் இறுதியுமான இலக்கு என்ற உங்கள் போக்கும் காரணம் என்பதை உணர்கிறீர்களா? வளர்ச்சிக்கான தேவைகள் உங்கள் கண்களில் படவே இல்லையா?

இல்லை. நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். வளர்ச்சிக்கு அமைதியும் அரசியல் ஸ்திரத்தன்மையும் அவசியம். காஷ்மீரிகளின் விருப்பப்படி தீர்வுகாணப்பட்டால்தான் அவை இரண்டுமே அமையும். காஷ்மீரின் வளர்ச்சிக்காக இந்திய அரசு செலவு செய்வதாகக் கூறுவதெல்லாம் சாம, தான, பேத, தண்ட முறைகளில் காஷ்மீரைப் பணியவைக்க - சாணக்கிய நீதியைப் பின்பற்றுவதற்காகும் வழியே.

இந்தியாவில் அழுத்தப்பட்ட சமூகங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவரவர் விருப்பத்துக்கேற்ப நாட்டைத் துண்டாடுவதைவிடவும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்தி நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்திசெய்துகொள்வதே சிறந்த வழியாக இருக்க முடியும் இல்லையா?

இந்தியாவின் வெவ்வேறு சமூகத்தவரின், இனத்தவரின் ஆசைகள், கோரிக்கைகள், போராட்டங்கள்குறித்து நான் அறிவேன். பழங்குடிகள் - நீராதாரம், காடு, நிலம் - ஆகியவற்றின் மீது காலங்காலமாகத் தங்களுக்கு இருந்துவரும் உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். சமூகத்தில் தங்களுக்கு கௌரவமும் சமத்துவ உரிமையும் வேண்டும் என்று பட்டியலினத்தவர் போராடுகின்றனர்.

தங்களுடைய விடுதலைக்காக வட கிழக்கு மாநில மக்கள் போராடுகின்றனர். தங்களுடைய இலக்குகளை அடையப் போராடும் அனைத்துத் தரப்பினர் மீதும் எனக்கு மரியாதை உண்டு. அனைத்துத் தரப்பினரும் இணைந்து போராட வேண்டும் என்பதே என் விருப்பம். இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் எங்களுடைய ஆதரவு உண்டு.

எங்களுடைய சுதந்திர காஷ்மீர் கோரிக்கையைப் பிரிவினை நோக்கம் கொண்டதாக நான் பார்க்கவில்லை. மாறாக, இந்திய அரசும் இந்திய மக்களும்தான் தங்களுடைய ஜனநாயகம் எவ்வளவு குறுகிய மனம் கொண்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன். 66 ஆண்டுகளுக்கு முன்னால் சுதந்திரம் அடைந்த இந்தியர்கள் அதன் பொருள் என்ன என்று அமர்ந்து யோசிக்க வேண்டும்!

தொடர்புக்கு: samas@kslmedia.in 

தி இந்து 

Wednesday, April 16, 2014

இந்தியா என்ன சொல்கிறது? - மேற்கு






மேற்கு இந்தியாவின் பயணத் திட்டம் தெளிவாக இருந்தது. கோவா, குஜராத், மகாராஷ்டிரம், டையு டாமன், நாகர் ஹவேலியை உள்ளடக்கிய இந்தப் பிராந்தியம் ஆரம்பக் காலத்திலிருந்தே தொழில் வளர்ச்சிக்குப் பேர்போனது. குறிப்பாக, சுதந்திரத்துக்குப் பின் தொழில்துறை வளர்ச்சியையும் நகரமயமாக்கலையும் படு வேகமாக முன்னெடுத்த மாநிலங்கள் மகாராஷ்டிரமும் குஜராத்தும்.

இதே முந்தைய காலகட்டமாக இருந்தால், மும்பையிலிருந்து பயணத்தைத் தொடங்குவதே பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது? ஆம், அகமதாபாத்திலிருந்தே பயணத்தைத் தொடங்கினேன்.

மேற்கின் ஆபரணம் என்று அழைக்கப்படும் குஜராத் வளத்துக்குப் பஞ்சம் இல்லாதது. அபார உழைப்பும் தொழில் உத்திகளையும் கொண்ட குஜராத்திகள் அந்த வளத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதவர்கள். காந்தியும் படேலும் குஜராத்தில் பிறந்தவர்கள் என்பதைக் காட்டிலும் ஜாம்ஷெட்ஜி டாடாவும் திருபாய் அம்பானியும் இந்த பிராந்தியத்தில் பிறந்தவர்கள் என்பது குஜராத்திகளுக்கு இந்தியத் தொழில் துறையோடு உள்ள பிணைப்பைச் சரியாக அடையாளப்படுத்தும்.

நம்முடைய தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிடவும் குஜராத்திகளின் சராசரி தனிநபர் வருமானம் மிகவும் அதிகம். ஆனால், இவ்வளவு பணம் கொழிக்கும் சிறப்பு அடையாளங்கள் எதுவும் அகமதாபாதில் இல்லை. ஒரு சராசரி இந்திய மாநகரம் எப்படி இருக்கும்? அப்படியே அகமதாபாதும்.

ஊரில் இறங்கியதும் கேட்ட முதல் குரல், ரயில் நிலையத்தில் சிதறிக் கிடக்கும் நிலக்கரியைப் பொறுக்கும் ராஜு சோலங்கியின் குரல். தன்னைப் போலவே அகமதாபாதின் சாலையோரக் குடிசை வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பெரும் கூட்டத்திடம் அவர் அழைத்துச் சென்றார். எல்லோருமே கிராமப் பின்னணி உடையவர்கள். எனக்கு இது அதிர்ச்சி. ஏனென்றால், கிட்டத்தட்ட குஜராத்தின் எல்லாக் கிராமங்களும் சாலை வசதி உடையவை.

நீண்ட காலமாகவே வேளாண்மையும் நல்ல நிலையிலேயே இருக்கிறது. பின் ஏன் கிராமங்களிலிருந்து இவர்கள் வந்தார்கள்? “சாலைகள் இரண்டு காரியங்களைச் செய்தன. ஒன்று, வயலில் இயந்திரங்களைக் கொண்டுவந்து இறக்க உதவின. இன்னொன்று, நாங்கள் அங்கிருந்து வெளியேற உதவின.

மேற்கின் வயல்களில் மனிதர்களைவிடவும் இயந்திரங்கள் அதிகம். வேளாண்மை நன்றாக இருக்கிறதுதான். ஆனால், செழிப்பவர்கள் யார்? முதலாளிகள். விவசாயத் தொழிலாளர்கள் இன்னமும் கையேந்தும் நிலையில்தான் இருக்கிறோம். கடந்த 10 வருஷங்களில் விலைவாசி எவ்வளவு கூடியிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோருக்கும் சம்பளமும் கூடியிருக்கிறது.

ஆனால், விவசாயத் தொழிலாளர்களின் கூலி? இங்கே நிலக்கரியையோ பிளாஸ்டிக் பாட்டில்களையோ சேகரிப்பதால் கிடைக்கும் வருமானத்தில் பாதிகூடக் கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை. கொஞ்சம் வீடு - தோட்டம் வைத்திருப்பவர்கள்தான் இன்னும் அங்கு பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

பகலில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை!

அகமதாபாதில் மட்டும் அல்ல; சூரத், வடோதரா, ராஜ்கோட், பவநகர், ஜாம்நகர், ஜுனாகட் எனப் பெரும்பாலான குஜராத் நகரங்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை வேலை செய்கிறார்கள். அதாவது, பகலில் ஓரிடத்துக்கு வேலைக்குச் சென்றால், மாலையில் இன்னோர் இடத்துக்கு வேலைக்குப் போவது அல்லது சாலையோரக் கடைகள் போடுவது. “முதலாளிகள் ஒரு வேலை பார்க்கலாம்; தொழிலாளிகள் ஒரு வேலை பார்த்துக் காலத்தை ஓட்ட முடியுமா?” என்கிறார், பகலில் சூரத்தில் ஒரு ஆலையில் வேலை செய்துகொண்டு, இரவில் ஆட்டோ ஓட்டும் ராம் சிங். இது ஓர் உலகம். இன்னோர் உலகமும் இருக்கிறது.

“இன்றைக்கு நீங்கள் ஒரு பெட்டியில் பணம் எடுத்துக்கொண்டு குஜராத் வந்தால், அடுத்த ஒரு மாதத்தில் நீங்கள் விரும்பும் தொழிலைத் தொடங்கிவிடலாம். எந்த அலைச்சலும் இல்லாமல் பத்தே நாட்களில் அரசாங்கம் எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்துவிடும். மின்சாரம், தண்ணீர் எல்லாம் சலுகை விலை. அருமையான தொழிலாளர்கள் ஏனைய இடங்களை விடவும் குறைவான கூலிக்குக் கிடைப்பார்கள்” என்கிறார் அகமதாபாத் தொழிலதிபரும் முதலீட்டாளருமான நீரவ் படேல்.

இரு உலகங்களின் கதாநாயகன்

பொதுவாக, இந்த இரு உலகங்களுமே மோடியை விரும்பு கின்றன. “பணம் முக்கியம் என்றால், தொழில் முக்கியம். இங்கு எல்லா முதல்வர்களுமே தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள். இன்றைக்கு மோடிக்கு இணையாகச் சொல்ல குஜராத்தில் ஆள் இல்லை” என்கிறார்கள். குஜராத் கிராமப்புறங்களில் மோடி அரசு செயல்படுத்திய நர்மதை கால்வாய்த் திட்டமும் சபர்மதி ஆற்றங்கரையை கான்கிரிட் கரையாக மாற்றும் திட்டமும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கின்றன.

ஆனால், எல்லோருமே மோடியைப் பற்றிப் பயத்துடனே பேசுகிறார்கள். “மோடிஜி மர்மமானவர்” என்கிறார்கள். பொதுவாக, குஜராத் எங்கும் இந்து முஸ்லிம் சமூகம் இரண்டாகப் பிளவுபட்டிருக்கிறது. இந்துக்களிடம் பேசும்போது, “மோடிதான் எங்கள் பாதுகாப்புக்கு உறுதுணை” என்கிறார்கள். முஸ்லிம்களிடம் பேசும்போது, “மோடி நாசக்காரர்; எங்கள் வாழ்வைக் குலைத்தவர்’’ என்கிறார்கள்.

இந்தியா நகரமயமாக முடியுமா?

குஜராத்துடன் ஒப்பிடும்போது - சுரங்க மாஃபியாக்கள் பிரச்சினை நீங்கலாக - கோவா சௌக்கியமாக இருக்கிறது. சுற்றுலா வாழவைக்கிறது. டையு டாமன், நாகர் ஹவேலி நிலைமையும் அப்படியே. ஆனால், மகாராஷ்டிரத்தை நோக்கி நகர்ந்தபோது நிலைகுலைந்துபோனேன். இந்தியாவின் அதிர்ச்சியான முகங்களை இங்குதான் சந்தித்தேன்.

ஒருகாலத்தில் நகரமயமாக்கலையும் சிறுதொழில் துறையையும் வளர்த்தெடுத்த மகாராஷ்டிரம், இன்றைக்கு நகர மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏனைய மாநிலங்களுக்கு ஒரு பாடம் என்பதுபோல இருக்கிறது. நாட்டின் மாபெரும் நகரமான மும்பையில் ஒருபுறம் அதன் அற்புதமான கட்டமைப்புக்கும் மறுபுறம் அது ஏழைகளுக்கு அளிக்கும் அசிங்கமான வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தடயங்கள் ஏதும் தென்படவில்லை.

நவிமும்பை, புனே, நாக்பூர், நாசிக், ஔரங்காபாத், கோலாப்பூர், தானே, சோலாப்பூர், அமராவதி, சாங்லி நகரங்கள் யாவும் அடிப்படை வசதிகளை அளிக்கவே போராடுகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் கிராமப்புற வாழ்க்கையை மகாராஷ்டிர ஆட்சியாளர்கள் எவ்வளவு சீரழித்திருக்கிறார்கள் என்பதற்கு விதர்பா விவசாயிகள் ரத்த சாட்சியம் அளிக்கிறார்கள். நாட்டிலேயே ஏழ்மையான வாழ்க்கை நிலவும் மேற்கு இந்தியாவின் எல்லையோரமான விதர்பா பிரதேசம் சுமார் 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்திய விவசாயிகளின் தற்கொலைத் தலைநகரமாக அறியப்பட்ட இந்தப் பிராந்தியத்தில், இதுவரை கிட்டத்தட்ட 1.4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “கடந்த மாதம்கூட 23 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள்” என்று தொடங்கினார் விவசாயியும் விதர்பா ஜன் அந்தோலன் சமிதியின் பிரதிநிதியுமான பாபு ராம்.

“மகாராஷ்டிரத்தின் மூன்றில் இரு பங்கு கனிம வளம் இங்கு இருக்கிறது. அரசாங்கம் அக்கறை காட்டியிருந்தால், இந்த வறண்ட பிரதேசத்தின் வறுமையைப் போக்கியிருக்க முடியும். ஆனால், அரசாங்கம் புறக்கணிக்கிறது... தொடர்ந்து புறக்கணிக்கிறது. மகாராஷ்டிர விவசாயிகளுக்குத் தண்ணீர் பெரிய பிரச்சினை. நியாயமாக நீராதாரங்களை உருவாக்குவதுதான் அரசியல்வாதிகளின் முதல் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், அவர்களைப் பொறுத்த அளவில் கொள்ளையடிப்பதற்கான துறை பாசனத் துறை.

ரூ. 70 ஆயிரம் கோடியைப் பாசனத்துக்கு என ஒதுக்கி 0.1% பாசன வசதியை மட்டுமே உருவாக்குபவர்களை நீங்கள் உலகில் எங்காவது பார்க்க முடியுமா? தண்ணீர் கேட்டுப் போராடும் மக்களுக்கு, ‘அணையில் நான் வேண்டுமானால் மூத்திரம் பெய்துவிடவா?’ என்று கேட்கும் அரசியல்வாதிகளை நீங்கள் எங்காவது பார்க்க முடியுமா? மகாராஷ்டிரத்தில்தான் பார்க்க முடியும். துணை முதல்வராக இருந்த அஜித் பவார் பொது மேடையில் அப்படிக் கேட்டார். பாசனத் திட்டங்களின் பெயரால் ரூ. 70 ஆயிரம் கோடியை அவர் காலிசெய்தார் என்பதைப் பின்னாளில் முதல்வரே சொன்னார். இவ்வளவு கொடூரமான வர்களை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது” என்கிறார் பாபு ராம்.

இன்னும் அதிரவைக்கின்றன ‘பிரயாஸ்’அமைப்பு சொல்லும் உண்மைகள். மகாராஷ்டிரத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் 23 பாசனத் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட தண்ணீரில் 40% முதல் 80% வரை தொழிற்சாலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய அமைப்பு இது. “அரசின் கொள்கை, மொத்தம் உள்ள தண்ணீரில் 72% விவசாயத்துக்கும் 7% தொழிற்சாலைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. நடப்பதோ தலைகீழ்” என்கின்றனர் இந்த அமைப்பினர்.

“இப்படி ஒருபுறம் எங்களை வஞ்சிக்கும் அரசாங்கம், மறுபுறம் பி.டி. பருத்தி சாகுபடி செய்யச் சொல்லி எங்களைப் பரிசோதனை எலிகளாக்கிக்கொண்டது. தண்ணீர் பாடு பெரும்பாடு. பத்துக் காசு வட்டிக்குக் கடன் வாங்கிதான் பருத்தி விவசாயத்தில் ஈடுபடுகிறோம். பத்தாண்டுகளில் உற்பத்திச் செலவு ஐந்து மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது. பருத்தி விலையோ முன்னைவிடவும் குறைந்திருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், விளைச்சலும் பொய்த்தால் ஒரு விவசாயிக்குத் தற்கொலையைத் தவிர என்ன வழி இருக்கிறது?” என்று கேட்கும் அம்பே தானூரா அடுத்துச் சொன்ன விஷயங்கள் மனசாட்சி உள்ள எவரையும் உலுக்கக் கூடியவை. “வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். எங்களுக்குப் பல நாள் இரவு உணவு வெறும் தண்ணீர்தான். பசியில் இருக்கும் பிள்ளைகளுக்குத் தண்ணீரை உணவாகக் கொடுப்பதைவிடவும் ஒரு கொடுமை உலகில் கிடையாது. இங்குள்ள விவசாயிகளில் பாதிப் பேர் அந்தக் கொடுமையைத்தான் தினமும் செய்கிறோம்.

சிறுநீரகத்தை விற்றால் கிடைக்கும் காசில் கொஞ்ச நாள் சாப்பிடலாம் என்பதால், பலர் சிறுநீரகத்தை விற்றார்கள். அப்படி விற்றவர்களில் ஒருவன்தான் நானும்” என்று அறுவைச் சிகிச்சை தழும்பைக் காட்டுகிறார். சிங்னபூர், டோர்லி, லெஹேகான் போன்ற கிராமங்களில் சர்வ சாதாரணமாக மும்பையின் பெரு மருத்துவமனைகளின் சிறுநீரக விற்பனைத் தரகர்களை அணுக முடிகிறது. “விதர்பா தனி மாநிலம் ஆக வேண்டும். அதுதான் இப்போதைக்கு ஒரே தீர்வு” - இதுதான் விதர்பா எங்கும் ஒலிக்கும் ஒரே குரல்.

நீண்ட காலத்துக்கு முன் தமிழகத்திலிருந்து நாக்பூரில் குடியேறிய காஷ்யபனிடம் பேசியபோது சொன்னார்: “தொழில் வளர்ச்சியினால் மட்டுமே நாட்டை வளப்படுத்திவிட முடியும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை மகாராஷ்டிரத்துக்கு - விதர்பாவுக்கு வந்து செல்ல வேண்டும். எப்படிப்பட்ட நரகமாக இந்த நாட்டை உருவாக்க விரும்புகிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துவிடும்!”

தொடர்புக்கு: samas@kslmedia.in

தி இந்து